தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள்.
ஹீரோக்கள் கொண்டாடினார்கள். இந்தி ரசிகர்கள் மட்டும் அல்லாமல் உலகமே இவரின் அழகில் சொக்கிப் போய் கிடந்தது.
பதினைந்து வருடங்கள் இவரின் பிடிக்குள் பாலிவுட் இருந்தது. அதன் பின் ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கினார்.
இரண்டு அழகான பெண் குழந்தைகள். குழந்தைகளை வளர்த்தார். சினிமாவை விட்டு விலகினார். பிள்ளைகள் வளர்ந்தார்கள்.
நடிகைக்கு ஐம்பது வயது ஆனது. மீண்டும் சினிமா ஆசை வந்தது. முப்பது லட்ச ரூபாய்க்கு மார்பு ஆப்ரேஷன் செய்தார்.
பாலிவுட்டில் மீண்டும் நடிகையின் பெயர் அடிபட ஆரம்பித்தது. இவரின் ஆப்ரேஷன் செய்யப் பட்ட முன்னழகில் சொக்கிப் போனார்கள் ரசிகர்கள்.
மீண்டும் ஒரு ரவுண்டு ஆரம்பித்தார். விளம்பரப் படங்கள், அழகிபோட்டிகள், ஆடல் பாடல்கள் என்று கொஞ்சம் குடும்பம், பிள்ளைகளை மறந்து போனார்.
அங்குதான் வினை. மூத்த மகள் ஊர் சுற்ற ஆரம்பித்தார்.மகளின் மிரட்டும் அழகில் மும்பை வாலாக்கள். மகளுக்கு பாய் பிரண்டுகள் அதிகம் ஆனார்கள்.எப்போதும் குடி கூத்து கும்மாளம். வீட்டிற்கே வர ஆரம்பித்தார்கள்.
மகளின் ‘அந்த’ மாதிரி படங்கள் வெளிவர ஆரம்பித்தது. வலை த்தளங்களில் வைரல் ஆனது. ரொம்ப லேட்டாக விழித்தார் அம்மா நடிகை.
மகளைப் பற்றி விசாரித்தார். அத்தனையும் பகீர் ரகம். திடுக்கிட்டுப்போனார். மகளின் செல்போனை எடுத்துப் பார்த்து அதிர்ந்து அழ ஆரம்பித்து விட்டார் அம்மா நடிகை.
கணவரோடு பேசினாராம். மகளை கடுமையாக கண்டித்தார்கள். செல் போனை பிடுங்கி சுக்கு நூறாக உடைத்தார்களாம்.
இப்போது மகளுக்கு கிட்டத்தட்ட வீட்டுச் சிறை என்கிறது பாலிவுட் பத்திரிக்கைகள். விரைவில் பாலிவுட் படங்களில் மகளை நடிக்க வைக்க தீவிர ஏற்பாடுகளைக் செய்ய ஆரம்பித்து விட்டாராம் அம்மா நடிகை.