உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உபி மிசாப்பூர் மாவட்டத்தில் உள்ள டெட்ரியா என்ற கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் காலை நேரத்தில் வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு சென்றதும் இரவில் விபச்சார மற்றும் ஆபாச நடன மையமாக மாற்றப்பட்டுள்ளது.
உள்ளூரில் இருக்கும் முக்கிய புள்ளிகள் தனியார் ஓட்டலில் நடனமாடும் பெண்களை அழைத்து வந்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதனை கண்டு களிப்பதற்காக பல ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி கிளம்பியுள்ளது.
இது பற்றி போலீசார் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி முடிந்த பின்னர் சாவி யாரிடம் கொடுக்கப்பட்டது, இதற்கு யார் யாரெல்லாம் உடந்தை என்று தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment