Friday, August 18, 2017

குடிபோதையில் மகளுடன் தந்தை… தாய் செய்த விபரீத காரியம்..!



கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த சேஷாத்ரி குமுதா தம்பதியின் மகள் சகுந்தலா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன் தினம் நள்ளிரவில் குமுதாவும் சகுந்தலாவும் அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர். ரத்தம் படிந்ததுடன் சேஷாத்ரி தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தாய், மகள் ஆகிய இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், தப்பியோடிய சேஷாத்ரியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார்.


மதுவுக்கு அடிமையான சேஷாத்ரி, குடிபோதையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்துள்ளார். குடிபோதையில் மகள் என்றும் பாராமல் தனது ஆசைக்கு இணங்குமாறு சகுந்தலாவை வற்புறுத்தியுள்ளார்.
தந்தையின் செயலால் அதிர்ச்சியடைந்த சகுந்தலா, இதுகுறித்து தாய் குமுதாவிடம் கூறியுள்ளார். குமுதா இதைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சேஷாத்ரி தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இத்தகவலை சேஷாத்ரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Latest

அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?

தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular