Friday, August 18, 2017
சொகுசு வாகனத்தில் இரண்டு ஆண்களுடன் ‘தொழில் செய்த’ பெண் சிக்கினார்
கடும் போதைபழக்கத்துக்கு ஆளான பெண், தனது கள்ளக் காதலன் மற்றும் ஏனைய இருவருடன் இணைந்து சொகுசு வாகனத்தில் வந்து தங்க மாலைகளை அறுத்துச்சென்ற சந்தர்ப்பத்தில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, மோரோன்குடுவ பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான சிற்றூர்ந்து சுற்றித்திரிவதாக காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, பெண் செலுத்தி வந்த சொகுசு வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
போலியாக இலக்கத்தகடு ஒட்டப்பட்ட நிலையில் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வாகனத்தில் இருந்து 3 கிராம் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், வாகனத்தில் இருந்த ஒரு நபர் பெண்ணின் கள்ளக்காதலன் என தெரியவந்துள்ளது.
ஏனைய இருவரும் கல்கிஸை, படோல்விட பிரதேசத்தைச் சேர்ந்த போதைபொருள் வியாபாரிகள் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண், புறக்கோட்டையை சேர்தவர் எனவும், கள்ளக் காதலன் கண்டியை சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கண்டியில் தனியார் வங்கியில் பணிப்புரிந்த நிலையில், இந்த பெண்ணின் அறிமுகத்துக்கு பின்னர், தமது பணியை இராஜினாமா செய்துள்ளார்.
அதன்பின்னர் பெண்ணுடன் இணைந்து கொழும்பில் வசித்து வருகின்றார்.
விசாரணைகளையடுத்து, அவர்கள் பயணித்த காரில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் 7 கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பெண், இதற்கு முன்னர் இரவு விடுதியில் பணிபுரிந்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் சொகுசு சிற்றூர்ந்தை வாடகைக்குப் பெற்ற இந்த பெண், பாணந்துறை பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை வாடகைக்குப் பெற்று, தங்க நகைகளை கொள்ளையிட்டு ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
மற்றுமொரு பெண்ணிடம் உள்ள ஸ்கூட்டரில் சென்று தங்க நகைகளை அறுக்கும் செயற்பாட்டில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
தனியாக வீதியில் செல்லும் பெண்களை நிறுத்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள முகவரி அட்டையை காட்டும் இந்தக் குழுவினர், அந்த பெண்களின் தங்க நகைகளை அறுத்துக்கொண்டு தப்பியோடி விடுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Latest
அடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா! நடிகை எடுத்த பயங்கர முடிவு..?
தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ...

Popular
-
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
-
வீடியோ இங்கே அழுத்துங்கள் தேசி டீன் மங்கைகள் மிகவும அம்ச மாக இருக்கிறார்கள். அவர்களது சுவையான முலைகளில் இருந்து நல்ல சாறு கசியும...
-
தாடி, மீசை வைத்த ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்பதையும் தாண்டி, இது நமது பாரம்பரிய தோற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. தாடி,...
-
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் மேல் நிலைப்பள்ளியில் இருந்து 12 மாணவிகள் வாள் சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக ந...
No comments:
Post a Comment